Mai 9, 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளம் யுவதி ஒருவர் திடீர் கைது!

போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி டுபாய் வழியாக இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளம் யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்பிட்டி பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய இளம் யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று அதிகாலை 3.15 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் செல்லவிருந்தார்.

இவர் சமர்ப்பித்த ஆவணங்களை சந்தேகத்தின் பேரில் விமான அதிகாரிகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையிடம் ஒப்படைத்தனர்.

இதன்போது யுவதியால் சமர்ப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் இத்தாலி விசா ஆகியவை போலியானவை என்று தொழில்நுட்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவரது பொருட்களை தேடியபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்லுபடியாகும் கடவுச்சீட்டையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.