April 27, 2024

நீஸ் தேவாலய தாக்குதல் தொடர்பில் 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது!

நீஸ் தேவாலய தாக்குதல் தொடர்பில் 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல்  நடத்திய துனிசியாவைச் சேர்ந்த பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொண்டு வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், நேற்று வியாழக்கிழமை மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதி இறுதியா தொலைபேசியூடான இவருடன் உரையாற்றியதாக அறிய முடிகிறது.

நேற்றைய நீஸ் தாக்குதலில் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் மூவர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதி தொடர்பில் எந்த ஆவணங்களும் உளவுத்துறையிடம் இருந்திருக்கவில்லை எனவும், கை ரேகை தடயங்களும் கூட இருக்கவில்லை என அறிய முடிகிறது.