யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இபோ ச பேருந்து வீதியை விட்டு விலகி புகையிரத யாதையுடன் மோதி விபத்துக்குள்ளாகியது


யாழ்ப்பாணம் காரைநகர் சாலைக்கு சொந்தமான கொழும்பு யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து இன்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணித்துக் கொண்டிருந்த வேளை யாழ்ப்பாணம் -கண்டி(A-9) பிரதான வீதி சாவகச்சேரி புத்தூர் சந்திப்பகுதியில் வீதியை கடக்க முயன்ற சிறுவன் மீது பஸ் மோதுவதை தவிர்ப்பதற்கு பஸ்ஸின் சாரதி முயன்ற போது பஸ் வேககட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த புகையிரத கடவை யுடன் மோதி விபத்துக்குள்ளாகியது எனினும் பஸ் வண்டியில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை பேருந்து சேதமடைந்துள்ளது குறித்த விடயம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள் வீதியை கடக்க முயன்ற இளைஞன் பஸ்ஸில் மோதுவதை தவிர்க்க சாரதி பஸ்ஸை மறு பக்கம் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் வண்டி புகையிரத பாதையுடன் மோதி யது