250 பிரச்சினையில்லை:நூறா தள்ளு உள்ளே?

மாவட்ட செயலகத்தில் 250 பேர் கலந்து கொண்ட கூட்டத்தை கண்டுகொள்ளாத சுகாதார அதிகாரிகள் 100பேர் பங்கெடுத்த திருமண நிகழ்வில் பங்கெடுத்தோரை தனிமைப்படுத்த முற்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பகுதியில் சுகாதார பிரிவினரின் அறிவுரைகளை மீறி திருமணம் நடத்தப்பட்டமையால், திருமண வீட்டாரை தனிமைப்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

சாவகச்சேரி பகுதியில் திருமண நிகழ்வு ஒன்றிற்கு 50 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்.

வெளிமாவட்டத்தவர்கள் கலந்து கொள்ள முடியாது. சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனும் நிபந்தனைகளுடன் திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் அதனை மீறி திருமண நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் உரிய சுகாதார விதிமுறைகளையும் பேண தவறியுள்ளனர். அதனால் திருமண வீட்டாரை தனிமைப்படுத்தவும், திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.