Mai 9, 2024

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்றுபேர் படு காயம் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்றுபேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

இன்றையதினம் பிற்பகல் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வருகைதந்த கென்ரர் ரக வாகனம் தாண்டிக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது வேககட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்து மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் கென்ரர் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்திற்குள்ளான வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.