பிரித்தானிய மகாராணி ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் தெரியுமா?

பிரித்தானிய மகாராணி ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் தெரியுமா?

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு Independent என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத் எந்த வகை மதுவை அருந்துவார் மற்றும் அதன் அளவுகோல் குறித்த விபரங்களை வெளியிட்டது.

அதன்படி, தினமும் மதிய உணவு வேளைக்கு முன்னர் ஜின் மற்றும் Dubonnet wine மதுவகைகளை ஒன்றாக கலந்து அதனுடன் எலுமிச்சை மற்றும் ஐஸ் கட்டிகளை கலந்து குடிப்பார்.

மதிய உணவு உண்ணும் போதே wine மதுவையும் அருந்துவார் என கூறப்பட்டுள்ளது. மாலை வேளையில் gin மற்றும் vermouth கலந்த Martini (Cocktail) மதுவை மகாராணி அருந்துவார்.

இவை எல்லாவற்றின் அளவை சேர்த்தால் ஒரு நாளைக்கு 6 யூனிட் அளவு மதுவை எலிசபெத் மகாராணி குடிக்கிறார்.

வாரத்துக்கு 40.6 யூனிட் அளவாக இது உள்ளது.

சாதாரண குடிமக்கள் வாரத்துக்கு 14 யூனிட் அளவு வரை மட்டுமே மது அருந்த வேண்டும் என்பது பிரித்தானிய அரசின் அறிவுறுத்தலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.