9 பேருக்கு கொரோனா ..!! எங்கு தெரியுமா ??

9 பேருக்கு கொரோனா ..!! எங்கு தெரியுமா ??

கொழும்பு துறைமுகத்திலுள்ள கப்பலில் இதுவரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 9 பேர் மட்டக்குளியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மீதமுள்ளவர்கள் ராகம, மத்துகம, வெண்ணப்புவ, காலி, நீர்கொழும்பு மற்றும் மாதறை முலடியனவல் வசிப்பவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதையடுத்து ஹங்வெல்லயில் உள்ள பஹத்கம பகுதியைச் சேர்ந்த ஒருவர் கப்பல்துறையில் பணிபுரிந்ததால் அவர் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளானார்.

எனினும் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக ஹங்வெல்ல பொது சுகாதார ஆய்வாளர் லக்ஷ்மன் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை குறித்த நபரை அங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் பயணித்த பஹத்கம பகுதியில் பல கடைகள் மூடப்பட்டு அதன் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.