பிரித்தானியாவின் நிலை தொடர்பில் பிரதமர் எச்சரிக்கை

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் மற்றும் அதற்கு அப்பால் வரை நிலைமை தொடர்ந்து கடினமாக தான் இருக்கும் என அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கடுமையான சோர்வை அனுபவிக்கும் மக்களை நான் பாராட்டுகிறேன். அவர்கள் என் மீது கோபமாக இருக்கிறார்கள், அவர்கள் அரசாங்கத்தின் மீது கோபமாக இருக்கிறார்கள்.

கிறிஸ்மஸ் வரை தொடர்ந்து நிலைமை கடினமாக இருக்கப் போகிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும், அதற்கு அப்பால் கடினமாக இருக்கலாம்.

எனினும், கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஒரே வழி இதுதான்.

எவ்வாறாயினும், கிறிஸ்மஸ்க்குள் நிலைமை கணிசமாக மாறும் என்றும், வசந்த காலத்திற்குள் நிலைமை மாறிவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்களில் தடுப்பூசி அல்லது சோதனை சோதனை தொடர்பான நற்செய்தி வரும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று ஜான்சன் கூறினார்.