April 27, 2024

வடக்கில் எரிபொருள் தட்டுப்பாடு; எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் செல்லும் மக்கள்!

வடக்கில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது, குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் இவ்வேறான பிரச்சினைகள் காணப்படுகின்றது குறிப்பாக,

யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் “டீசல் இல்லை” என்ற பதாதை வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி மருதனார்மடம் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இவ்வாறு “டீசல் இல்லை” என்ற பதாதைகள் தொங்க விடப்பட்டுள்ளன.

அத்தோடு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகமான மக்கள் கூட்டத்தையும் அவதானிக்க முடிந்துள்ளது.

இதேபோல் கிளிநொச்சியில் அத்தியாவசிய தேவைகளிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல், டீசல் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.

கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் முதல் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிபொருள் பெற்றுக்கொள்ள வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதுடன், அதிருப்தி வெளியிடுகின்றனர்.

பெற்றோலுக்கு பதிலாக சுப்பர் பெற்றோலை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.

இருப்பில் இருந்த பெற்றோல் தீர்ந்து போயுள்ளது என்றும் வருகைதரும் மக்களிற்கு வழங்க முடியவில்லை என்றும் இருப்பில் உள்ள சுப்பர் பெற்றோலையே வழங்குகின்றோம், என்றும் அதுவும் குறைவாகவே உள்ளது என்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்

இருப்பில் உள்ள மிக குறைந்த அளவிலான பெற்றோல் மற்றும் டீசலை அத்தியாவசிய தேவையின் நிமித்தம் வருவோருக்கு உறுதிப்படுத்திய பின் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் வழங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன,

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முள்ளியவளை பகுதிகளில் இதே நிலைமைதான் காணப்படுகின்றன, அத்தோடு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகமான மக்கள் கூட்டத்தையும் அவதானிக்க முடிந்துள்ளது. எரிபொருள் பெற்றுக்கொள்ள வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதுடன், அதிருப்தி வெளியிடுகின்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert