Mai 2, 2024

ராஜீ சத்தியதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 28.01.2022

டென்மார்கில் வாழ்ந்து வரும் ராஜீ சத்தியதாசன் அவர்கள் கணவன் பிள்ளைகள் சகோதர, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும் உற்றார், உறவினர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புறவாழ

ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்திநிற்கின்றது

இப் பிரபஞ்சத்தில்
எனக்காக ..
பிரம்மாவால் படைக்கப்பட்டவள்
ஜன்னல் திறந்து அழகுமின்னலாக
என் வாழ்வில் குதித்தவள்
வானவில்லாக நிறம்மாற்றி
என் வாழ்வைப் புடம்போட்டவள்
கண்டம் துளைத்து – இந்த
பனிப்பாறையில் – தன்
இதயத்தை தொலைத்தவள் – அதுகும்
கவிஞனிடமென்றதும்
கவிதையையே வெறுத்தவள்
உளியால் செதுக்கிய
அழகு சிலையாய் – என்
உள்ளத்தை செதுக்கிய
அன்பு மனைவி raji க்கு – என்
இனிப்பான வாழ்த்துக்கள்.
வாழ்வின் ராகம்
விதியெனும் சுதியில்
இணைத்து வைத்த சங்கீதம்.
விலகா வன்பில்
உலவும் காதல் சாம்ராஜ்யம்.
வானத்து நிலவை
எனக்கு பிடிக்காது – நீ
என் வாழ்வில் வந்த பிறகு
நட்சத்திர இரவிலும்
சங்கீத உலாவாய்
துயரத்தை விலங்கிட்டு
பட்சத்தை பங்கிடும்
அன்னப் பட்சி நீ !
தன் அன்பின் ஈரத்தை
சம்சாரப் போர்வைக்குள்
போர்த்தி என்துன்ப
சகதிக்குள்ளும் தூய மலராய்
உள்ளத்தை காட்டிய
பாச தேவதைக்கு,
இந்த
ஏழைக்கவிஞனால் வேறு
என்னத்தைக் கொடுக்கமுடியும்
இந்த வாழ்தொன்றைத் தவிர
அன்பின் ஈரம் கலந்த
இனிய மண்தொட்டநாள்
வாழ்த்துக்கள்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert