Mai 4, 2024

பஞ்ச ஈச்சரங்களை புனிதப் பிரதேசங்களாக மாற்ற நடவடிக்கை எடுங்கள் வ- மா-மு-உறுப்பினர் சபா குகதாஸ்

இலங்கையில் உள்ள இந்து அமைப்புக்கள் இந்து குருமார் ஒன்றியங்கள் யாவும் இணைந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன தொன்மை மிக்க, பல அதிசயங்கள், அற்புதங்கள் நிகழ்ந்த சிவாலங்களான திருக்கேதீஸ்வரம் , திருக்கோணேஸ்வரம் , நகுலேஸ்வரம் , முன்னேஸ்வரம் , தொண்டேஸ்வரம் போன்ற பஞ்ச ஈச்சரங்களின் அமைவுப் பிரதேசங்களை புனிதப் பிரதேசங்களாக முறைப்படி அரசாங்கம் பிரகடனப்படுத்துவதற்கு ஒருமித்த கோரிக்கையை முன்வைத்து நிறைவேற்ற வேண்டும்.

தற்போது இந்து கலாசார அமைச்சுக்கு பொறுப்பாக பிரதமர் மகிந்த ராஐபக்ச இருப்பதால் விரைவாக இக் கோரிக்கையை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களும் இந்த புனிதப் பணியை நிறைவேற்ற உலக வாழ் இந்துக்கள் சார்பாக கோருகின்றோம்.

மகிந்த ராஐபக்ச தொடர்ச்சியாக திருப்பதி சென்று வருவதால் இந்து மதத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருப்பதாக உணர முடிகிறது அதனால் அவருடைய அமைச்சின் ஊடாக நிறைவேற்றுவது பொருத்தமானதாக இருக்கும். ஆகவே இந்து அமைப்புக்கள் அரசியல் கடிதம் எழுதுவதை ஒத்தி வைத்து விட்டு உங்கள் பிரதான பணியான மதப் பணியில் இதனை விரைவு படுத்துங்கள் 1965 இல் அரசியல்வாதிகள் முன்னேடுத்தமையால் திருக்கோணேஸ்வரம் புனிதப் பிரதேச ஆக்கும் பணி நிறைவேறாது தடைப்பட்டது எனவே இந்து அமைப்புக்களாக புனிதப் பயணத்தை ஆரம்பியுங்கள்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert