Mai 3, 2024

கோட்டா, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின்போது பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கெரவலப்பிட்டிய தொடர்பிலான அமெரிக்க ஒப்பந்தம் பற்றி ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இதன்போது ஜனாதிபதி தெளிவுபடுத்தலை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அமைச்சரவை மாற்றமொன்று விரைவில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.