Mai 2, 2024

நோர்வேயை அதிர வைத்த மர்ம நபர்!! பலர் பலி

நோர்வேயில் சற்று முன்னர் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒஸ்லோவுக்கு தென்மேற்கில் சுமார் 26 மைல் தூரத்தில் உள்ள காங்ஸ்பெர்க் (Kongsberg ) நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மர்ம நபர் ஒருவர் வில் மற்றும் அம்பை கொண்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

“இப்போது எங்களிடம் உள்ள தகவலின் படி, இந்த நபர் தனியாக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்” என்று காவல்துறை தலைமை அதிகாரி அய்விந்த் ஆஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இத்தாக்குதல் குறித்து பிரதமர் எர்னா சோல்பெர்க் கூறுகையில், இந்தச் சம்பவம் நம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனவும், மக்கள் அச்சப்படுகிறார்கள் என்பதை தான் புரிந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை உறுதிசெய்யப்படாத நிலையில், சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.