Mai 19, 2024

மீள திறக்கின்றன பாடசாலைகள்

இலங்கையில்  எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் மாகாண சபைகளின் கீழுள்ள 200 க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அனைத்து மாகாண ஆளுனர்களும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு முன்னுரிமை வழங்கி, பாடசாலைகளை மீள திறப்பதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.