Mai 9, 2024

துருக்கி ஜனாதிபதியின் கேலி சித்திரம் கடும் கண்டனம்!

சார்லி எப்தோவின் இந்த வார அட்டைப்படத்தில் துருக்கி ஜனாதிபதி டய்யிப் எர்டோகனின் கேலிச்சித்திரம் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகம்மதின் கேலிச்சித்திரம் சார்லி எப்தோவில் வெளியானதில் இருந்து தொடர்ச்சியாக துருக்கிக்கும் பிரெஞ்சு அரசுக்கும் முறுகல் நிலை நீடித்து வருகின்றது. துருக்கியில் இருந்து வெளியாகும் பல பத்திரிகைகள் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை கேலிச்சித்தமாக வெளியிட்டன.

இந்நிலையில், இவ்வாரத்தின் சார்லி எப்தோ பத்திரிகையில் துருக்கிய ஜனாதிபதி Tayyip Erdogan இன் கேலிச்சித்தம் வெளியாகியுள்ளமை அந்நாட்டு அரசியல் தலைவர்களிடையே பெரும் கோபத்தை தூண்டியுள்ளது.

துருக்கி அரசு ‚இதற்குரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்!‘ என அறிவித்து கண்டனம் வெளியிட்டுள்ளது.