Mai 11, 2024

யாழ் மாவட்ட செயலக வாணி விழா சிறப்பாக இடம்பெற்றது!

யாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில்யாழ் மாவட்ட செயலகத்தில் வாணி விழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் முத்தேவியரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு விசேட பூசைஆராதனைகள் இடம்பெற்றது

மாவட்ட செயலக வாணி விழாவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலக நலன்புரிசங்க தலைவருமான க.மகேசன்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மேலதிக அரசாங்க அதிபர்(காணி)முரளிதரன் மற்றும் மாவட்ட செயலக துறைசார் தலைவர்களின் பங்குபற்றுதலோடு தற்கால சூழ்நிலைக்கமைய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுடன் வாணி விழா சிறப்பாக இடம்பெற்றது.