துயர் பகிர்தல் நாகலிங்கம் பரமலிங்கம்

திரு நாகலிங்கம் பரமலிங்கம்

(ஓய்வுபெற்ற- இ.போ.சபை லிகிதர்)

தோற்றம்: 13 ஜூலை 1938 – மறைவு: 22 அக்டோபர் 2020

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பரமலிங்கம் அவர்கள் 22-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்ற பொன்னையா, இலக்குமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதிஅம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

துஸ்யந்தி(லண்டன்), ஸ்ரீஜெயந்தி(ஆசிரியை- யா/ அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம்), கிருசாந்தி(அபிவிருத்தி உத்தகயோகத்தர்- மாகாண காணி ஆணையாளர் திணைக்களம்), பிரசாந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வசந்தகுமார்(லண்டன்), அகிலன்(உதவி முகாமையாளர்- மக்கள் வங்கி, சங்கானை), உமாசங்கர்(சிரேஷ்ட பதவிநிலை உத்தியோகத்தர்- யாழ். பல்கலைக்கழகம்), தயாரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவரத்தினசிங்கம், காலஞ்சென்ற பாலசிங்கம், தவமணிதேவி, இந்துராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யானிக்கா, கர்னிக்கா, ஆரபி, ஆரூரன், அரங்கன், நிதுசா, நிலக்சா, டிலக்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இல. 37, செட்டித்தெரு ஒழுங்கை, நல்லூர் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
துஸ்யந்தி – மகள் Mobile : +44 792 218 7446   
ஸ்ரீஜெயந்தி – மகள் Mobile : +94 76 472 9177   
கிருசாந்தி – மகள்Mobile : +94 77 506 3462   
பிரசாந்தி – மகள் Mobile : +44 740 407 9401