Mai 10, 2024

நீதிமன்ற துப்பாக்கி சந்தையில் விற்பனை?

நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் நிமித்தம் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மற்றும் அதன் தோட்டாக்களை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முற்பட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹர்தமுல்ல பகுதியைச் சேர்ந்நத 37 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக கடமைபுரிந்து வரும் நபரெனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.