Mai 4, 2024

சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்! உக்ரைன் பொதுமக்கள் பலி – உள் நுழைந்துள்ள ரஸ்ய படைகள்

ரஸ்ய படைகள் நடத்திய குண்டு தாக்குதலில் 7 பொதுமக்கள் உயிரிழந்ததாக உக்ரைன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒடெசாவிற்கு வெளியே போடில்ஸ்கில் உள்ள ஒரு இராணுவப் பிரிவு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதன்போது 19 பேரையும் காணவில்லை. மரியுபோல் நகரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உகரேய்ன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இந்தநிலையில் ரஸ்யாவின் இராணுவ கான்வாய்கள் எல்லையை கடப்பதாக உக்ரைனின் எல்லை பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

வடக்கு செர்னிஹிவ் மற்றும் சுமி பகுதிகளிலும், கிழக்கு லுஹான்ஸ்க் மற்றும் கார்கிவ் பகுதிகளிலும் ரஸ்ய இராணுவ வாகனங்கள் உக்ரைனுக்குள் நுழைந்ததாக உக்ரைனின் எல்லைக் காவல் சேவை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அது கூறுகிறது.

இதன் காரணமாக உக்ரேனிய எல்லைப்படையினர் பலர் காயமடைந்துள்ளனர் இந்தநிலையில் உக்ரைனின் எல்லை படையினரும்; ஆயுதப் படையினரும்”எதிரிகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன” என்று உக்ரைனின் எல்லை பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை ரஸ்யாவின் வான்வழித் தாக்குதலை எதிர்த்து தனது விமானப்படை போராடி வருவதாக உக்ரைன் இராணுவத்தின் அறிக்கைக்கு ரஸ்ய படையினர் பதில் வழங்கியுள்ளனர்

அதில் “உக்ரேனிய ஆயுதப்படைகளின் வான் பாதுகாப்பு ஒடுக்கப்பட்டது” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert