Mai 4, 2024

அசராத ரஷ்யா: எந்தவித சமரசமும் கிடையாது என்கிறார் புடின்

ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு நலன்களில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

கிரெம்ளின் மேற்கு நாடுகளுடன் வெளிப்படையான விவாதங்களுக்கு இன்னும் தயாராக இருப்பதாக வலியுறுத்துகிறது.
எங்கள் நாடு எப்போதும் நேரடி மற்றும் நேர்மையான உரையாடலுக்குத் திறந்திருக்கும் மற்றும் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு இராஜதந்திர தீர்வுகளைத் தேட தயாராக உள்ளது. ஆனால் ரஷ்யாவின் நலன்களும் நமது மக்களின் பாதுகாப்பும் மறுக்க முடியாத முன்னுரிமை என்பதை நான் மீண்டும் கூற விரும்புகிறேன் விளாடிமிர் புடின் கூறினார்.

முன்னதாக உக்ரைனில் பிரிவினைவாதம் கோரிய 2  பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக ரஷ்யா அறிவித்தது. மேலும் அங்கு ரஷ்ய இராணுவத்தை அனுப்பவும் அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை அறிவித்துள்ளன.

உக்ரைன் படையெடுப்பை தவிர்க்குமாறு கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், ரஷ்ய மக்களின் நலன்கள் மற்றும் தேவைகளில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை என புதின் தெரிவித்துள்ளார். இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert