Mai 4, 2024

இந்தியாவில் கொரோனா ஒரே நாளில் 1.59 லட்சம் பேர் பாதிப்பில் 327 பேர் பலியாகியுள்ளனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 327 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,55,28,004 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,623 ஆக உயர்வு. கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது நேற்றைய பாதிப்பை விட 17,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,55,28,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 327 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,83,790 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் 40,863 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,44,53,603 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,72,169 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 5,90,611 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,51,57,60,645 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 89,28,316 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,623 ஆக உயர்ந்துள்ளது.அதில் 1,409 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒமைக்ரான் தொற்று பாதித்த மாநிலங்களில் அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் – 1,009,டெல்லியில் – 513,கேரளாவில் – 333,தமிழகத்தில் – 185 ஆக பதிவாகியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert