April 23, 2024

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் : 13-ம் தேதி வரை இயக்கப்படும்!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் வரும் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள், தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து செல்வார்கள். அவர்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை 16 ஆயிரத்து 768 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன் 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 3 நாட்களுக்கும் சேர்த்து 10 ஆயிரத்து 300 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து குறிப்பிட்ட 3 நாட்களுக்கு 6 ஆயிரத்து 468 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்54கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert