துயர் பகிர்தல் சபாபதி சக்திக்குமார்

யாழ். அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி சக்திக்குமார் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதி, அன்னபகவதி தம்பதிகளின் சிரேஸ்டப் புதல்வரும், காலஞ்சென்ற இரத்தினசபாபதி, செல்லம்மா(சிங்கப்பூர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

லோகன், ஈசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சக்திமதி(இலங்கை), சதாமதி(கனடா), சாந்திமதி(கனடா), சிந்துமதி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற முருகதாஸ், இராதாகிருஸ்ணன்(சட்டத்தரணி), அருந்தவ சண்முகநாதன்(Shan- கனடா), விக்னேஸ்வரன்(Jamo- கனடா), மதியழகன்(கனடா), கலாவதி(சிங்கப்பூர்), குமரன்(சிங்கப்பூர்), ஹேமாவதி(சிங்கப்பூர்), அருட்செல்வன்(சிங்கப்பூர்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

சாயிபிருந்தா- பிரதீபன், மதுரன், அபிலன், அஞ்சலி, புருஷோத்தமன், கிஷான் ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25-11-2020 புதன்கிழமை அன்று மாலை பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 26-11-2020 வியாழக்கிழமை அன்று காலை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியையில் குறிப்பிட்ட உறவுகளே கலந்துகொள்ள முடியும் என்பதால் தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சண் – மைத்துனர்

விக்கி – மைத்துனர்

சிந்து – சகோதரி

சாயிபிருந்தா – மருமகள்

சக்திமதி – சகோதரி

குமரன் – மைத்துனர்