Oktober 18, 2024

இலங்கை நாடாளுமன்றமா அல்லது இராணுவ முகாமா?

அமைச்சர் வாசுதேவ நாயணக்காரவுக்கும், பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. “பாராளுமன்றம் இராணுவ முகாம் அல்ல” என வாசுதேவ நாயணக்கார கடும் வார்த்தைகளால் சரத் பொன்சேகாவை இதன் போது எச்சரித்தார்.

“இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி இப்போதைக்குத் தேவையில்லை” என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்ததையடுத்தே இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை எதிர்த்து சரத் பொன்சேகா உரையாற்றிய போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஆரம்பமாகியது.

தன்னுடைய உரையின் போது சரத் பொன்சேகா குறுக்கிடக்கூடாது என எச்சரித்த வாசுதேவ நாணயக்கார, ‘இது பாராளுமன்றம். இராணுவ முகாம் அல்ல’ எனவும் தெரிவித்தார்.