Mai 13, 2024

யாழ் கோப்பாய் துயிலுமில்லத்தடியில் குழப்பம்!

யாழ் கோப்பாய் துயிலுமில்லத்தடியில் குழப்பம்!

மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுக்கும் சிரமதானப் பணி தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் கேள்வி எழுப்பிய நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

சற்று முன்னர் அந்தப் பகுதியை சிரமதானப்பணிக்கு உட்படுத்ததுவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் சென்றபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தற்போது சிரமதானப்பணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபட்டுவருகின்றனர்.