உடுவிலில் மேலும் ஒருவர்:நிவாரணம் வருமாம்?
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/11/4-42.jpg)
யாழ்.குடாநாட்டில் உடுவில் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனாவைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்விலேயே இது கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே சுயதனிமைப்படுத்தப் பட்டுள்ள குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் நாளையிலிருந்து விநியோகிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க,மகேசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் அச்சத்தின் காரணமாக சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு இலங்கை அரசினால் இடர் கால நிவாரணமாக 5000 ரூபா பெறுமதியான உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
அவ்வகையில் நாளையதினத்திலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்திலும் நிவாரண பொதி விநியோகிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாண குடாநாட்டில் கொரோனா தொற்றுக்கு ள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணியதன் அடிப்படையில், மற்றும் தொற்றுக்குள்ளானவர்கள் பயணித்த பேருந்து வண்டிகளில் பயணம் செய்ததன் அடிப்படையில் இன்றைய தின தரவின்படி 772 குடும்பத்தைச்சேர்ந்த 1700 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் .
முதற்கட்டமாக யாழ் மாவட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் சுயதனிமைப்படுத்தலில் உள்ள 509 குடும்பங்களுக்கு நாளைய தினத்திலிருந்து அந்தந்த பிரதேச செயலகப் பிரிவுகளில் கிராமசேவகர் ஊடாக நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.