Mai 3, 2024

25 ஆம் திகதி வரை விளக்க மறியலில்?

கிளிநொச்சி  கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் 25ஆம. திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட படகுகளில் பயணித்த மீனவர்கள் 12 பேர் இன்று அதிகாலை  கைது செய்யப்பட்டதோடு அவர்கள் பயணித்த 2 படகுகளும் கடற்படையினரால்  கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களும் படகுகளும் நாச்சிக்குடா  கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட 12 மீனவர்களும் இன்று மாலை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தவேளை அனைவரையும் 25 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert