Mai 2, 2024

மகனைத் தேடி வந்த மற்றொரு தாயும் உயரிழந்தார்!

வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று (21) மரணமடைந்துள்ளார். வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த 78 வயதான கருப்பையா ராமாயி என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார். 

இவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் வயது 38 கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளைவேனில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். 

அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 1799 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்துகொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். 

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert