Mai 2, 2024

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம், பளை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் கன்னிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரிவினரால், மனித எச்சம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  பளை காவல்துறையினருக்கும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இன்று (19) வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான், அப்பகுதியை பார்வையிட்டார்.

நீதவானின் அனுமதியுடன் அப்பகுதியில் மேலும் அடையாளப்படுத்தபட்ட இடங்களில் அகழ்வுப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert