Mai 9, 2024

கொரோனா தடுப்பூசி – இரண்டு நாட்களுக்குள் வருகிறது மற்றுமொரு அறிவிப்பு

இன்னும் இரண்டு நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி தொடர்பில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முக்கிய செய்தியை அறிவிக்கஉள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்தில் அஸ்ட்ராஜெனிகா என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியால் கொரோனாவில் இருந்து மனிதர்களை பாதுகாக்க முடியும் என மதிப்பிடப்படுகிறது.

ஆனால் இந்த நிறுவனம் முதல் கட்ட பரிசோதனை குறித்த முடிவை இன்னும் வெளியிடவில்லை. இதற்கிடையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்திற்கு லைசன்ஸ் கொடுத்துள்ளதாகவும், இதுகுறித்து இரண்டு நாட்களுக்குள் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்தை கண்டுபிடித்த நிறுவனம் ‘‘இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது ஊக்கம் அளித்துள்ளது. முதல் கட்ட பரிசோதனைக்கான முடிவுகள் ஜூலை இறுதிக்குள் வெளியிடப்படலாம்’’ எனத் தெரிவித்துள்ளது.