April 28, 2024

மிக மோசமான உச்சகட்ட அழிவை சந்திக்க போகும் மக்கள்.. உலக சுகாதார அமைப்பு

கொரோனா தொற்று மிகமோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய, ஆசிய நாடுகளில் பல நாடுகள், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இன்னும் பல நாடுகள் தவறான திசையில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றனர். அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றாமல் போனால், கொரோனாவின் பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

இப்போது இருக்கும் நிலைமையைவிட படுமோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும். ஒவ்வொரு அரசாங்கமும் தங்கள் மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை தெளிவாக விளக்க வேண்டும். பரவுதல் மற்றும் உயிர்களை காப்பாற்றுவதை மையமாக கொண்டு ஒரு விரிவான திட்டத்தை வகுக்க வேண்டும்.

மக்கள் சமூக இடைவெளி, கைகழுவுதல், முக கவசம் அணிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் போன்ற அடிப்படை பொது சுகாதார கொள்கைகளை பின்பற்றவில்லை என்றால் இந்த நோய் நம்மை மோசமான நிலைக்கு இழுத்துச் செல்லும் என தெரிவித்துள்ளார்.