Mai 4, 2024

வற்றாப்பளை கண்ணகியம்மனுக்கு சென்றால் தண்டனை….!

வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை இடம்பெறவுள்ள நிலையில் வற்றாப்பளைக்குள் நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள் என வற்றாப்பளை பொலிசார் அறிவித்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ஆலயங்களிலும் மக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய திருவிழாவில் 75 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட நபர்கள் தவிர்ந்த வெளியாட்கள் ஆலயத்திற்குள்ளோ அல்லது ஆலய வளாகப்பகுதிக்குள்ளோ நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாக வற்றாப்பளை பொலிசார் அறிவித்துள்ளனர்.

ஒலிபெருக்கி மூலம் பொலிசார் இது குறித்த அறிவித்தலை விடுத்து வருகின்றனர்.

எனினும், புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான் மற்றும் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கால்நடையாகவும், துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஆலயத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.