April 26, 2024

இலங்கை முப்படை தளபதிகளையும் சந்தித்த தூதர்!

சர்ச்சைகளிற்கு மத்தியில் இலங்கை விமானப்படை தளபதியை அமெரிக்க தூதர் சந்தித்துள்ளார்.

ஏற்கனவே இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவை அவர் சந்தித்தமை கோத்தபாயவை சீற்றங்கொள்ள வைத்திருந்தது.அனுமதியின்றி இசந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்நிலையிலேயே கடற்படை தளபதியை தொடர்ந்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவை இன்று (27) சந்தித்தார்.

இலங்கை விமானப்படைத் தலைமையகத்தை வந்தடைந்த அமெரிக்கத் தூதுவர் அங்கு விமானப்படைத் தளபதியுடன் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இரு தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் நினைவுப் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert