Mai 4, 2024

லக்சம்பேர்க்கை நோக்கி நகரும் 8 ஆம் நாள் போராட்டம்!

தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8ம் நாளாக (23/02/2022) தொடரும் ஈருறுளிப்பயணம். 

கடந்த 16/02/2022 மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பமானது.  இன்று (23/02/2022) கொட்டும் மழையிலும் கடுமையான மேடுகளிலும் இயற்கை சீற்றத்தின் காரணத்தினால் பலவீதிகளில் பயணிக்க முடியாத சூழல் நிலவிய போதும் பெரும் சவால்களுக்கு மத்தியில் மனித நேய ஈருருளிப்பயணம்பயணித்துக்கொண்டு இருக்கின்றது. பெல்சியத்தின் தலைநகரம் Brussel  மாநகரத்தின் ஊடாக   Wavre , Namur , Bastogne மாநகரங்களினைக் கடந்து Luxembourg நாட்டினை நோக்கி விரைகின்றது. 

சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீனவிசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பதனை பெல்சிய வெளி நாட்டு அமைச்சிடம் மாநகரசபைகள்வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கடந்து வரும் அரசியல் மையங்களில்ஒப்படைக்கப்பட்டு நம்பிக்கை வாக்குறுதிகளும்  பெறப்பட்டன.   அதே வேளையில் பெல்சிய ஐரோப்பிய பாராளுமன்றஉறுப்பினர்களை சந்தித்து எமது கோரிக்கைகளை வலுப்பெற குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert