Mai 3, 2024

ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் விடுதலை!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டுள்ளார்.
விசேட மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த நிலையில், ஹேமசிறி பெர்னாண்டோ மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களிலும், அவரை விடுவித்து விடுதலை செய்ய விசேட மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert