April 26, 2024

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர், பொதுத்தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து விலகுவேன் என தெரிவித்துள்ளார்.

சிலர் கட்சி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்த போதிலும் அவ்வாறான ஒரு வீழ்ச்சி ஏற்படவில்லை.

எதிர்காலத்தில் கட்சியின் ஆலோசகராக தான் செயற்பட்டு இளைஞர் பரம்பரைக்கு கட்சியை ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

பின்னடைவுகளிற்கு மத்தியிலும் சுதந்திரக்கட்சிக்கு எதிர்காலம் உள்ளது

சம்பிரதாய அரசியலில் இருந்து மீண்டு கல்வியறிவு மிக்க புதிய சிந்தனைகளை உடைய இளைஞர்களுக்கு சுதந்திர கட்சியை பாரப்படுத்தவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.