Mai 11, 2024

பெரியகுளம் சந்திக்கும் புத்தர் வருகின்றார்!

திருமலையில் பெரியகுளம் சந்தி மலையில் விகாரை அமைப்பதற்கு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஏதுவாக அப்பகுதியிலுள்ள தமிழ் மக்களிற்கு சொந்தமான கடைகள் இரண்டை அகற்றுமாறு நிலாவெளி பொலிசில் பௌத்த துறவிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து கடைப்பகுதி வருகை தந்திருந்த பொலிஸார் தமிழ் வர்த்தகர்களை மிரட்டியுள்ளனர்.