April 26, 2024

போர்க்குற்றம்: ரஷ்ய படை வீரர்களுக்கு 11.6 ஆண்டுகள் சிறைத் தண்டணை

உக்ரைனில் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இரண்டு ரஷ்ய வீரர்களுக்கு 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மத்திய உக்ரைனில் உள்ள ஒரு கோர்ட்டில், ரஷ்ய வீரர்கள் இருவர் மீதும், வடகிழக்கு கார்கிவ் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்கள் மீது கிராட் ஏவுகணைகளை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

ரஷ்ய படைவீரர்கள் சார்பில் வாதிட்ட உக்ரேனிய வழக்கறிஞர்கள், அவர்கள் இருவரும் ரஷ்ய இராணுவத்தின் கட்டளைகளைப் பின்பற்றி, நிர்ப்பந்தத்தின் கீழ் செயல்பட்டனர் என்று வாதிட்டனர்.வழக்கறிஞர்கள் தங்களுக்கும் ரஷியாவில் உள்ள சட்ட அதிகாரிகளுடனோ பிற இராணுவ அதிகாரிகளுடனோ எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறினர்.

இந்த நிலையில்,  விசாரணைக்கு வந்த வழக்கில் அலெக்சாண்டர் போபிகின் மற்றும் அலெக்சாண்டர் இவானோவ் ஆகிய இருவருக்கும் 11 ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் பொதுமக்கள் பகுதிகளில் பீரங்கிகளை சுட்ட குற்றவாளிகள் என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இதேபோன்று கடந்த வாரம்  உக்ரைனால் சிறை பிடிக்கப்பட்ட ரஷிய வீரர்கள் மீதான போர்க்குற்றம் தொடர்பான வழக்குகள் விசாரணை தொடங்கி நடைபெற்றது. அதன் படி, முதல் போர்க்குற்ற வழக்காக உக்ரைன் மூதாட்டி ஒருவரை சுட்டுகொன்ற ரஷிய வீரர் மீதான வழக்கை விசாரித்த மற்றொரு உக்ரேனிய கோர்ட்டு, அதில் அந்த ரஷ்ய வீரருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert