April 28, 2024

Tag: 19. September 2020

தமிழர்களை பின்தொடர சிங்கள மாணவர்களிற்கு ஆலோசனை?

யாழ்ப்பாண பல்கலைக்கழக்கத்தில் நடப்பது பகிடி வதை அல்ல. அதுவொரு இம்சை என துணைவேந்தர் சிறீசற்குணராசா தெரிவித்துள்ளார்.இது பற்றி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் கொவிட்-...

வெடுக்குநாறி மலை: விடாது துரத்தும் இனவாதம்?

வெடுக்குநாறிமலை ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் முதலாம் நாள் வழிபாடுகள் நேற்றையதினம் விமர்சையாக இடம்பெற்றிருந்த போதும்  இராணுவப்புலனாய்வாளர்கள் இடையிடையே ஆலயத்திற்கு வருகைதருவதும் செல்வதுமாக காணப்பட்டதாக பக்தர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். நேற்றிரவு நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி தனது குழுவினருடன் திடீர் விஜயமாக வருகைதந்து ஆலயச்சூழலை கண்காணித்துவிட்டுச்சென்றுள்ளார். ஒலிபெருக்கி சாதனம் பயன்படுத்த நெடுங்கேணிப்பொலிசார் வேண்டுமென்றே தடைவிதித்துள்ளார்கள்.பொலிசாரின் கடும் கண்காணிப்புடன் கூடிய பிரசன்னத்தால் பக்தர்களின் வரவு இன்று சடுதியாக குறைந்து காணப்பட்டது. குறிப்பிட்டளவு கிராம மக்களுடன் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இளைஞர் குழுவும் வவுனியாவிலிருந்து ஒரு இளைஞர்குழுவும் ஆலயத்திற்கு வருகை தந்தார்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டது. உற்சவத்தின் ஆரம்பநாளின் பாரம்பரிய நிகழ்வுகளான சூலம் எடுத்தல் விளக்குவைத்தல், உச்சிமலை ஆதிலிங்கேஸ்வரர் தரிசனம் ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. 26ம் திகதி சனிக்கிழமை உற்சவத்தின் இறுதிநாளில் 108 பானைகளில் பொங்கிப்படைக்கும் வழிபாட்டு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் ரம்சி ராசீக் பிணையில்!

அரசியல் பழிவாங்கலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் ரம்சி ராசீக் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் திடீரெனெ இவருக்கு முகநூல் மற்றும் பிற...

தங்கம் போல மின்னும் மஞ்சள்?

தங்கத்திற்கு ஈடாக இந்தியாவிலிருந்து கடத்தப்படுகின்ற பொருட்களுள் ஒன்றாக சமையலுக்கான மஞ்சள் மாறியிருக்கின்றது. இந்நிலையில் தென்னிலங்கை களஞ்சியசாலை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் தூள் தொகையுடன்...

அடையாள உணவுமறுப்புப் போராட்டம்

இந்திய அரசின் ஆதிக்க சதிவலைக்குள் சிக்கித் தவித்த தமிழீழ மீட்பினை தமிழ்மக்கள் மத்தியில்வெளிக்கொண்டு வருவதற்கு அந்த அரசிடம் பன்னிரெண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரையிலான உண்ணா நோன்பினை...