Mai 9, 2024

சரவணபவனிடம் வேலைக்குச் சென்ற சுமந்திரன்! வெளியான முக்கிய செய்தி…

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள், சுமந்திரனுக்கு வாக்களிக்காதீர்கள் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்த போராளி பசீர் காக்கா குறிப்பிட்ட செய்தியை சனிக்கிழமை காலை உதயன் பத்திரிகை முன்பக்க செய்தியாக வெளியிட்டிருந்தது.

அந்த பத்திரிகையை நேற்று முன்தினம் தமிழரசுக் கட்சியினால் வேட்பாளர் அறிமுக விழா இடம்பெற்ற போது, வேட்பாளர் அறிமுக விழா ஆரம்பமாவதற்கு முன்னர் சுமந்திரன் இலவசமாக மண்டபத்தில் இருந்தவர்களுக்கு வழங்கியிருந்தார்.

இப்பத்திரிகையை சாவகச்சேரியில் இருந்து சுமந்திரனின் எடுபிடி வக்கீல் சயந்தன் அவர்கள் ஒரு கடையில் விநியோகத்திற்காக இருந்த 100 பிரதிகளையுமே வாங்கி வந்தார்.

அதன் பின்னர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி நவிண்டில் பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரத்தின்போதும் உதயன் பத்திரிகையை கையில் வைத்துக் கொண்டு விளம்பரம் செய்தார் சுமந்திரன்.

தோல்வியை முழுமையாக அறிந்து கொண்ட சுமந்திரனிடம் இருந்து சகல வேட்பாளர்களும் விலகிச் சென்ற நிலையில் சுமந்திரன் பதற்றத்துடனும் அச்சத்துடனும் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது உதயன் பத்திரிகையின் பிராந்திய விநியோகத்தராக மாறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடும் அதேவேளை, சுமந்திரனின் இந்த செயல்பாட்டை கண்டு மகிழ்ச்சி அடைந்த பத்திரிகை உரிமையாளர் சரவணபவன் திங்கள் முதல் மேலதிகமாக ஆயிரம் பிரசுரங்கள் பதிப்புச் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.