April 28, 2024

தொழில்நுட்ப நிதி உதவிக்கு 11 மில்லியன் யூரோ

ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் கீழ்கண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இன்று உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.

1 . தொழில் பயிற்சித் திட்டம் – 7 மில்லியன் யூரோ இளைஞர்களுக்காக அவர்களின் கோரிக்கைக்கு அடிப்படையிலான தொழில் பயிற்சியை வழங்குவதே இந்த திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.

2 . சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை அபிவிருத்தித் திட்டம் – 3.5 மில்லியன் யூரோ இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு சர்வதேச சந்iதையில் நிலவும் போட்டித்தன்மைக்கு ஈடுகொடுக்கக்கூடிய வசதிகளை செய்துகொடுப்பதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

3. கல்வி மற்றும் மேலாண்மை நிபுணத்துவ நிதி– 0.5 மில்லியன் யூரோ புதிய திட்டங்களை வகுக்கும்போது தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், சிறிய அளவிலான திட்டத்திற்கு நிதியை ஒதுக்குவதற்கும், ஜேர்மன் நிபுணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

மேலே குறிப்பிடப்பட்ட திட்டங்கள் GIZ நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும். தொழில் பயிற்சி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான துறைகளின் அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பல வழிகளில் பங்களிப்பு செய்து தொழில் நுட்பம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி ஜேர்மன் அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கிவருகிறது.

மேற்படி விடயங்களுக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று நிதி மற்றும் கொள்ளை அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது. நிதி அமைச்சின் செயலாளர், திரு.எஸ்.ஆர்.ஆடிகல இலங்கையின் சார்பிலும் இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதுவர் திரு.ஜோன் ரோட் (Mr. Jorn Rohde) ஜேர்மன் அரசாங்கத்தின் சார்பிலும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. அஜித் அபேசேகர மற்றும் GIZ நிறுவனத்தின் இலங்கைகான பிரதிநிதி திருமதி. கிறிஸ்டின் இயன்வ்ல்ட் (Christiane Einfeldt) ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.