Mai 4, 2024

கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்! வெளியேறினார் ரணில்

கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்! வெளியேறினார் ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சிக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை சிறிகொத்தாவில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

ஐ.தே.க தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது, பொதுத் தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து தலைவர் ரணில் விக்ரமசிங்க தெளிவுப்படுத்தியதன் பின்னரே இந்த அமையின்மை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ரணில் விக்ரமசிங்க கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.