April 28, 2024

பாலைவனத்தில் சிக்கி மீண்டு.. மனைவி குழந்தையுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட பிரித்விராஜ்

ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்புக்காக பிரித்விராஜ் உட்பட 58 பேர் கொண்ட குழு ஜோர்டன் நாட்டுக்குச் சென்றது. கொரோனா நெருக்கடி காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக அனைவரும் அங்குச் சிக்கியிருந்தனர்.

கடந்த வாரம் தான அனைவரும் இந்தியா திரும்பினர். வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பும் அனைவருமே கட்டாயமாக 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட நடிகர் பிரித்விராஜ் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, தற்போது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், Reunited எனவும் பதிவிட்டுள்ளார்.