Mai 7, 2024

இலங்கையில் வேகமாக அதிகரித்தது கொரோனா!

இலங்கையில் வேகமாக அதிகரித்தது கொரோனா!

ஸ்ரீலங்காவில் நேற்றையதினம் 47 புதிய கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1796 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டவர்களுள் 42 பேர் கடற்படை சிப்பாய்களும், 03 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களும், 02 பேர் பங்களாதேஷிலிருந்து வருகை தந்தவர்களும், ஒருவர் துபாயிலிருந்து வந்தவரெனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 946 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும், குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 839 ஆக காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

தற்போது வைத்தியசாலையில் மருத்துவ சோதனையில் 56 பேர் உள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.