Mai 6, 2024

இரு குழுக்களுக்கிடையே முற்றிய மோதல்..!!

இரு குழுக்களுக்கிடையே முற்றிய மோதல்..!!

முந்தல் – கிரிமட்டாவ பகுதியில் இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற இந்த மோதலில் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மதுபோதையிலிருந்த ஒருவரே தனது தோட்டத்தில் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இவ்வாறு வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் முந்தல் பொலிஸார் கூறினர்.

சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் பகுதிக்கு இன்று காலை விஜயம் செய்த முந்தல் பொலிஸாரும், புத்தளம் மாவட்ட குற்றப்புலனாய்வு பொலிஸாரும் அந்தப் பகுதியில் சோதனைகளை மேற்கொண்டனர்.

குறித்த குழு மோதலில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்ட பொலிஸார், இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அசித லக்ருவன் தலைமையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மேலும் குறிப்பிட்டனர்.