Mai 8, 2024

தமிழ் ஒட்டுக் குழுக்களுக்கு செருப்படி- தலைவர் உயிருடன் பிடிபடவில்லை என்ற சரத் பொன்சேக்கா

விடுதலைப் புலிகளின் தலைவர் இலங்கை ராணுவத்திடம் உயிருடன் பிடிபட வில்லை என்று சரத் பொன்சேகா பகிரங்கமாக தெரிவித்துள்ள விடையம். பல தமிழ் ஒட்டுக் குழுக்களின் முகத்தில் கரியை பூசியுள்ளது. விடுதலைப் புலிகளை விரும்பாக ஒரு சாராரும். தமிழ் பேசும் தமிழ் இனத் துரோகிகளுமே இது போன்ற வதந்திகளை பல வருடங்களாக பரப்பி வந்தார்கள். இறுதி யுத்தத்தில், தலைவர் பிரபாகரனை இலங்கை ராணும் உயிரோடு பிடித்ததாக இவர்களே தொடர்சியாக கூறி வந்தார்கள்.

இன்னும் கொஞ்சம் கற்பனை வளம் கொண்ட தமிழ் இனத் துரோகிகள் சிலர், தலைவர் பிரபாகரன் அவர்களை கொழும்பு கூட்டிச் சென்று மகிந்த முன்னால் மன்றியிட வைத்தார்கள் என்று கூட பொய்யான செய்திகளை பரப்பி வந்தார்கள். தமிழர்களின் மனோபலத்தை  உடைக்கவும். தமிழ் ஈழம் என்னும் அவர்களின் கோட்பாட்டை சிதைக்கவுமே இவர்கள் போன்ற துரோகிகளி இது போன்ற பெய்யான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால் இன்று சரத் பொன்சேகா கூறியுள்ள விடையங்களை பார்த்தால்…

ஒரு சிங்கள அடிப்படை இனவாதியான சரத் பொன்சேகா கூட, தலைவர் பிரபாகரன் அவர்களை தான் மதிப்பதாக கூறியுள்ளார். இதனை விட நல்ல செருப்படி ஒன்று தமிழ் ஒட்டுக் குழுக்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. தன்னிடம் இறுதிக் குண்டு இருக்கும் வரை பிரபாகரன் போராடினார் என்று போரை நடத்திய தளபதி கூறியுள்ளதோடு. அவர் இறந்தார் என்று தான் கேள்விப் பட்டதாக தான் கூறியுள்ளாரே தவிர. அதனை அவர் உறுதி செய்யவில்லை. என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.