Mai 4, 2024

யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள் இதோ….

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(01) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். அராலிப் பிரதேசம், அராலி ஐயனார் கோயிலடி, அராலி கொலனி,  அராலி சரஸ்வதி பாடசாலை, செட்டியார்மடச் சந்தி, கரம்பிட்டிப் பிள்ளையார் ஆலயம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.