April 28, 2024

பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்களை கையும் களவுமாக பிடித்த இந்தியா!

பாகிஸ்தானில் உளவு அமைப்பிற்காக இந்தியாவை வேவு பார்க்க வந்த தூதரக ஊழியர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டதுடன், நாட்டை விட்டு வெளியேறும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டில்லியில் இருக்கும் பாக்கிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்தவர்கள், அபீத் ஹூசைன், மற்றும் தாஹிர்கான்.

இவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த டில்லி சிறப்பு பிரிவு பொலிசார் அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.எஸ். அமைப்பிற்காக உளவு பார்த்து தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரும் 24 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை பாக்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று இவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்.