Mai 2, 2024

இந்தியா மிரட்டுகின்றது:சி.வி!

“இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு இந்திய அரசாங்கமானது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அத்தோடு 13வது திருத்தச் சட்டத்தினை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கோரியிருக்கின்றது.

 இதற்கு தமிழ் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவிடம் கோரி இந்தியப் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியமையும் ஒரு காரணமாக இருக்கலாமென வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யுhழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கருத்து வெளியிடுகையில்  அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக இருந்தால் காலம் கனிந்து நல்லதே நடக்கும் என ஏற்கனவே கூறியிருந்தோம் அதன் ஒரு அங்கமாகக் கூட இது இருக்கலாம்“ எனவும்; குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert