Mai 6, 2024

துயர் பகிர்தல் கூத்துக்கலைஞன் ‘குழந்தை’ செபமாலை

கூத்துக்கலையின் மகாகலைஞன் குழந்தை செபமாலை👏காலை கண்விழிக்கும் வேளையில் ஆர்வத்துடன் கைத்தொலைபேசி வாயிலாக நுழையும் முகநூலுக்குள் செல்வதற்கு மனது அவ்வளவாக இப்பொழுது இடம் கொடுப்பதாக இல்லை.எதிர்பாராதவிதமாக ஆளுமைகள் பலரை நாம் அடுத்தடுத்து இழந்து வருகிறோம். மரணங்கள் மலிந்துவிட்டன. ஈழத்துக் கூத்துக்கலையில் அண்ணாவி மரபைப்பேணிவந்த கலைப்பெருவிருட்சம் சரிந்தது.மன்னார் கூத்தின் மகாகலைஞனின் மறைவு மனதை வருத்துகிறது.ஈழத்தின் பாரம்பரியக் கலையை தனது வாழ்காலம் முழுவதும் பேணிக்காத்து வந்த ஒரு பெரும் கூத்துக்கலைஞன் ‘குழந்தை’ செபமாலை அவர்களின் மறைவு கூத்துக்கலையுலகிற்குப் பேரிழப்பு!ஆழ்ந்த இரங்கல்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert